Latest

கொரோனா வைரஸ் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் சீனாவை மையமாகக் கொண்டு பரவிய கொரோனா வைரஸ், 171 நாடுகளில் உள்ள 4 இலட்சம் பேருக்குப் பரவியுள்ளது. மேலும் 14,705 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 98,834 பேர் அதிலிருந்த மீண்டுள்ளனர் என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 425-ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? அதிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன?
கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்
கோவிட் 19 வைரஸ் முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.
இவ்வைரஸ் தீவிரமடைந்தால் நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள 
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.
நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள் 
கைப்பிடிகள், தானியிங்கி இயந்திரத்தின் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். 
காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.
நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?
கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது.
56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO) சோதனை செய்ததில்
  • 6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
  • 14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை
  • 80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம். 
கொரோனாவை குணப்படுத்த முடியுமா?
தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் சுயபரிசோதனை 
அப்பல்லோ மருத்துவமனை மக்களிடம் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை அறிந்துக்கொள்ள ஒரு இணையதள ஸ்கேன்னர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்கள் உடம்பில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பதை சுயபரிசோதனை செய்ய https://bit.ly/3agPJs3 இந்த பக்கத்திற்கு சென்று பாருங்கள்.

No comments